உயர்தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம் பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார் என பெண்ணின் பெற்றோரினால் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் வசிக்கும் 21 வயதான இளம்பெண்ணுக்கும் , ஆசிரியர் ஒருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்துள்ளது.
ஆசிரியர் பெண்ணின் வீட்டுக்கு சென்று திருமணம் தொடர்பில் பேசியும் உள்ளார். பெண்ணின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் அப்பெண் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பரீட்சை எழுதி வந்துள்ளார்.
நேற்றைய தினம் பரீட்சை எழுதிய பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை முச்சக்கர வண்டியில் வந்த ஆசிரியரின் குழுவினர் அப்பெண்ணை கடத்தி சென்றுள்ளனர் என பெண்ணின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments