Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மின் பாவனையை குறையுங்கள்!


மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) வேண்டுகோளின் பேரில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி இன்று ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

அதன்படி, குளிரூட்டிகள் (ஏ/சி) மற்றும் தேவையற்ற விளக்குகள் நிறுவனங்களின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் என அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து அதிகாரிகளை கொழும்புக்கு வரவழைப்பதற்காக அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவது ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரத்னசிறி மேலும் குறிப்பிட்டார்

No comments