Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

24 மணிநேரத்தில் விபத்துக்களால் 14 பேர் உயிரிழப்பு!


கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் இடம்பெற்ற 13 வாகன விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூவரசங்குளம், கிரிபாவ, இங்கிரிய, பொரளை, பதியத்தலாவ மற்றும் ஹபரண ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக ஆனமடுவ, நவகுருந்துவத்த, இரத்தினபுரி, அங்குணகொலபெலச, கிளிநொச்சி மற்றும் வெலிமட ஆகிய பிரதேசங்களில் ஏனைய விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை , மன்னார் - வவுனியா வீதியில் தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் 12 வயதிற்கும் 78 வயதிற்கும் இடைப்பட்டோரே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்களில் உயிரிழந்த பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments