Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை !


தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

சுமார் 2 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு நிமலனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2007 மே 28 ஆம் திகதி இரத்மலானையில் விசேட அதிரடிப்படையினர் சென்ற ட்ரக் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தியமை குறித்தும் விசாரணை இடம்பெறுகின்றது.

மேலும் 2009 பெப்ரவரி 7 இல் குருநாகலில் அப்போதைய ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்தமை குறித்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

2009 மார்ச் 13 ஆம் திகதி அக்குரஸ்ஸ தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் உட்பட 46 பேரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பாகவும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுகின்றன.

அத்துடன், 2009 ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை வெடிகுண்டு வைத்து படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பாகவும் தங்கவேலு நிமலனுக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

No comments