கட்டார் நாட்டில் இருந்து , நாடு திரும்பியவரை காணவில்லை என அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பதுளை மாணிக்க வள்ளி தோட்டத்தை சேர்ந்த கணேசன் கலைச்செல்வன் (வயது 42) என்பவரையே காணவில்லை என அவரது மனைவி பதுளை பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
தனது கணவர் கட்டார் நாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்புவதாக அறிவித்து இருந்தார். ஆனாலும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
இது தொடர்பில் வெளிநாட்டு பணியகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது , அவர்களும் எனது கணவர் பல மாதங்களுக்கு முன்னரே இலங்கை வந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
ஆனாலும் எனது கணவர் இன்னமும் வீடு திரும்பவில்லை. இலங்கையில் அவர் எங்கு இருக்கிறார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் தனக்கு கிடைக்கப்பெறவில்லை என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments