Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முல்லைத்தீவில் கடத்தல்காரர்கள் பிடியில் இருந்து தப்பிய மாணவன்


புதுக்குடியிருப்பு பகுதியில்  வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன் , அடிகாயங்களுடன் கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளான். 

தான் கடத்தப்பட்ட வாகனத்தில் மேலும் இரண்டு சிறுவர்கள் கைகள் , கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்த மாணவன் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

புதுக்குடியிருப்பு , வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்றையதினம் சனிக்கிழமை மாலை தனியார் வகுப்பொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வேளை , ஆள் நடமாற்றம் அற்ற பகுதியில் வைத்து வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டான். 

மாணவனை கடத்தி சென்ற வான் காட்டு பகுதி ஊடாக சென்ற போது , வானில் இருந்து பாய்ந்த மாணவன் , காயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளான். 

காயங்களுடன் தப்பியோடி வந்த மாணவனை உறவினர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர். 

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாரிடம் , தான் கடத்தி செல்லப்பட்ட வாகனத்தில் ஏற்கனவே தன் வயதை ஒத்த இரு சிறுவர்கள் கைகள் , கால்கள் கட்டப்பட்டு , வாயிற்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் வாகனத்தில் காணப்பட்டதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments