கொழும்பு - கண்டி வீதியின் கடவத்த, 9 ஆம் கட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் , போலிய கொட பகுதியை சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments