நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களும் டீசல் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால் , டீசலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் அறிவித்துள்ளார்.
37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றி வந்த கப்பலில் இருந்து எதிர்பார்த்தவாறு இன்றைய தினம் டீசலை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு டீசலை விநியோகிக்க முடியாத நிலைமை காணப்படும். ஆகவே டீசலுக்காக டீசல் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் அறிவித்துள்ளார்.
அதேவேளை தற்போது கையிருப்பில் உள்ள டீசல்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்படும் எனவும், அதனால் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி நடைபெறும் என மேலும் தெரிவித்தார்.
No comments