Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் - காதல் விவகாரமே காரணமாம்


கட்டுகஸ்தோட்டை தீ விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் காதல் தொடர்பினால் ஏற்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த யுவதிக்கு இளைஞன் ஒருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்துள்ளது. 

அந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை யுவதியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞன் , வீட்டினுள் சென்று ஒரு வகை திரவத்தினை ஊற்றிய பின்னர் , வீட்டினுள் எவரும் வர முடியாதவாறு கதவுகளை சாத்திய பின்னர் , தானும் வீட்டினுள் நின்று வீட்டிற்குள் தீ வைத்துள்ளார். 

வீடு முழுவதும் தீ பரவியதில் , வீட்டிற்கு தீ வைத்த இளைஞன் , வீட்டில் இருந்த பெண் , பெண்ணின் தந்தை ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பெண்ணின் தாயாரை அயலவர்கள் மீட்டு வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments