Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீட்டில் வெடிபொருட்களை வைத்திருந்த கணவன், மனைவி கைது!


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வீட்டில் வெடிபொருட்களை வைத்திருந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

போர்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை எடுத்து அவற்றை வெட்டி வெடிமருந்தை எடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது கணவன் வீட்டில் காணப்படாத நிலையில் அவரை தேடி அரச புலனாய்வு பிரிவினர் சென்று கைதுசெய்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட குடும்ப பெண் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் 05.03.2022 அன்று முற்படுத்தப்பட்டவேளை அவரை எதிர்வரும் 15.03.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட கணவவனை 06.03.2022 நீதிமன்றின் அனுமதியுடன் 72 மணத்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

No comments