தற்போது வெளியாகியுள்ள புலமை பரீட்சையில் தனது மகன் பரீட்சை வெட்டுப்புள்ளிக்கு குறைவான புள்ளியை பெற்றதால் தாயொருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சம்பவம் இடம்பெறுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இருந்த நிலையில் தனது மகன் வெட்டுப்புள்ளிக்கு குறைவான புள்ளிகளை பெற்றமையால் தாய் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தோர் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
No comments