முறிகண்டி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் பிரதேச சபை சிற்றூழியர்களான மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மணவாளன் பட்டமுறிப்பை சேர்ந்த ஜெயராம் பிரசாத் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
முறிகண்டி பகுதியில் இருந்து கிளிநொச்சி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் உழவு இயந்திரத்தின் மீது அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது.
குறித்த விபத்தில் உழவு இயந்திரம் வீதியில் தடம்புரண்டது. அதன் போது உழவு இயந்திர சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த பிரதேச சபை சிற்றூழியர்களான மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் சடலமும் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments