Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு!


 கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த எகிப்திய சுற்றுலா பயணி ஒருவர் பட்டிபொல புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

எகிப்திய பிரஜையான அஹமட் மொஹமட் அப்துல் ஹமிட் (32) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சுற்றுலா பயணம் மேற்கொண்டு இலங்கை வந்து எல்ல புகையிரத நிலையம் வரை உடரட்ட ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது நேற்று மதியம் இவ்வாறு தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவரை நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவரது நண்பர்களால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

No comments