கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற ´நடுங்கமுவ ராஜா ´ என அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது.
இன்று காலை யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழக்கும் போது ´நெந்துன்கமுவே ராஜா´வுக்கு வயது 69 ஆகும்.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ´நெந்துன்கமுவே ராஜா´ கடந்த முறையும் எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடுங்கமுவ ராஜா என அழைக்கப்படும் இந்த யானை இந்தியாவின் மைசூரில் 1953களில் பிறந்தது.
கண்டியில் நடைபெறும் ஏசல ஊர்வலத்தின் புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித கலசத்தைத் தாங்கிச் செல்லும் பணியை செய்து வந்தது.
இது, ஆசியாவின் மிக நீளமான தந்தங்களைக் கொண்ட யானையாகும்.
இந்த யானை மைசூர் மகாராஜாவால் வழங்கப்பட்ட யானை ஆகும். அவரது உறவினரின் நீண்டகால நோயைக் குணப்படுத்தியதற்காக நன்றியுடன் மரியாதை செலுத்தும் விதமாக பிலியந்தலை, நிலாமகாரை கோயிலில் வசித்த மூத்த பூர்வீக மருத்துவர் துறவிக்கு மைசூர் மகாராஜா இந்த யானையை பரிசளித்தார்.
அதன் பின்னர் 1978ஆம் ஆண்டுகளின் பின்னர் இந்த யானைக்கு அது வசித்த கிராமமான நடுங்கமுவா எனும் பெயரை யானைக்கு சூட்டினார்கள்.
இந்த யானைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments