Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முல்லைத்தீவில் பேருந்து தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழப்பு!


 யாழ்ப்பாணம்-  முல்லைத்தீவு வழித்தடத்தில்  23 பேருடன் பயணித்த தனியார் பேருந்து ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற  இச்சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். 4 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னால்  அரச பேருந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் சென்ற தனியார் பேருந்து முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது.

 காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

இதுகுறித்து முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

No comments