திருகோணமலை - ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹொரவப்பொத்தானை நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும், திருகோணமலை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் காரில் பயணித்த அருட்தந்தை நிதிதாசன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments