Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஆபத்தான ஆயுதங்களுடன் சவாரியில் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி!


மோட்டார் சைக்கிளில் சவாரியில் கலந்து கொண்டிருந்த நபர் ஒருவர் தனது உடமையில் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன, 

மீரிகமவில் இருந்து கற்பிட்டி ஊடாக அனுராதபுரம் வரையிலும் நடத்தப்படவிருந்த மோட்டார் சைக்கிள் சவாரி பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில். தற்போது மக்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்து, சவாரியின் அடுத்தக்கட்டமான கற்பிட்டியில் இருந்து அனுராதபுரம் வரைக்குமான சவாரி நிறுத்தப்பட்டது.

அதற்கு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விளக்கத்துடன் ஊடக அறிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த சவாரியில் பயணித்தோர், பொலிஸார் விதித்திருந்த நிபந்தனைகளை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்து.

இந்நிலையில், படத்தில் உள்ளவாறு மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் சவாரியில் கலந்து கொண்டிருந்த காணொளி  ஒளிப்படங்கள் என்பன சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இந்த ஒளிப்படம் எவ்விடத்தில் வைத்து பிடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. இருந்த போதிலும், மோட்டார் சைக்கிள் இலக்கம் WP (மேல் மாகாணம்) என ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது. 


No comments