Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தேர்த்திருவிழாவில் அசம்பாவிதம் - 11 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழப்பு!


தமிழகம் - தஞ்சை அருகே உள்ள ஆலயமொன்றின் தேரோட்டத்தின் போது மின்சார கம்பியில் தேர் தொடுகையுற்றதால் , மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் தோரோட்டம் நேற்று இரவு நடைபெற்றது.அதன்போது தேர் மீது மின்சார கம்பியுடன் தொடுகையுற்றதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீப்பற்றி எரிந்த தேரை போராடி அணைத்தனர். இருந்த போதிலும் தேர் முற்றிலும் எரிந்து போனது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தேர் பவனியின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments