கடும் பெருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் மத்திய வங்கி நேற்று (புதன்கிழமை) 119.08 பில்லியன் ரூபாயை அச்சடித்துள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 432.76 பில்லியன் ரூபாய் பணம் இலங்கை மத்திய வங்கியினால் அச்சிடப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டில் நிதியமைச்சரோ , மத்தியவங்கி ஆளுநரோ , நிதியமைச்சின் செயலாளரோ பதவியில் இல்லாத நிலையிலையே அவ்வளவு தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் , மத்தியவங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர் தமது பதிவுகளை இராஜினாமா செய்துள்ள நிலையில் , புதியவர்கள் எவரும் அப்பதவிக்கு நியமிக்கப்படாத நிலையிலையே பணம் அச்சிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments