Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொலிஸ் தங்குமிடத்திலிருந்து பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு!


அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார் தங்குமிட அறையில் உறக்கத்திற்காக சென்ற  பொலிஸ் சார்ஜன்ட்  ஒருவர் வெள்ளிக்கிழமை(15) அதிகாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மொனராகலை மாவட்டம் தம்பகல்ல பகுதி மக்குல்ல நகரத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான  திசாநாயக்க முதியன்சலாகே கருணாரத்ன  (வயது 56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவ இடத்திற்கு சென்ற  கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீர் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டதுடன் சடலத்தை உடல்கூற்று பரிசோதனைக்காக  கல்முனை ஆதார  வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். 

அம்பாறை தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்  மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிசார்     மேற்கொண்டு வருகின்றனர்.  

No comments