Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை!


நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர்  சுசந்த லியனாராச்சி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அது தொடர்பில் தெரிவிக்கையில், 

உற்பத்திகள் விற்பனை செய்யப்படாத நிலை ஏற்படும் போது, ​​இறக்குமதியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.10 மில்லியனில் வீடு கட்ட திட்டமிட்டிருந்தால் 25 மில்லியனில் கூட கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு மாஃபியா. இந்த நேரத்தில் சீமெந்து விலையை இறக்குமதியாளர்கள் சங்கம்தான் முடிவு செய்கிறது.

சீமெந்து மூடை ஒன்றின் விலை இதுதான் என அவர்கள் முடிவு செய்கின்றனர். அது செயற்படுத்தப்படுகிறது. அரசாங்கம் அதில் தலையிடுவதில்லை.

எனவே அனைவரும் குறைந்தது மூன்று மாத காலங்களுக்காவது தயவுசெய்து கட்டுமானத் தொழிலை நிறுத்துங்கள் என மேலும் கோரியுள்ளார். 

No comments