யாசகம் கேட்டு கொடுக்காததால் ஏற்பட்ட தகராறினால் வைத்தியர் ஒருவரை யாசகர் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.
மாலபே பொத்துவார வீதியை சேர்ந்த ஆயுள்வேத வைத்தியரான 57 வயதுடையவே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பத்தரமுல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு குறித்த வைத்தியர் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு திரும்பிய வேளை , வர்த்தக நிலையத்திற்கு வெளியில் நின்ற யாசகர் அவரிடம் யாசகம் கேட்டுள்ளார்.
வைத்தியர் யாசகம் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன் போது யாசகர் தான் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதம் ஒன்றினால் வைத்தியரை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
வைத்தியரை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் வர்த்தக நிலையத்தில் உள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ள நிலையில் அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தப்பி சென்ற யாசகரை கைது செய்தவற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
No comments