நாடு தழுவிய ரீதியில் இன்று கடையடைப்பிள்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன. ஆனாலும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.
வர்த்தக நிலையங்கள் சில முழுமையாகவும் பெரும்பாலான நிலையங்கள் பகுதியளவிலும் திறந்திருந்தன.
மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது பெரும்பாலான பாடசாலைகள் மாணவர் குறைவாக காணப்பட்டதுடன் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பிச் சென்றனர்.
No comments