Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வன்முறைச் சம்பவங்களினால் இதுவரை 8 பேர் உயிரிழப்பு


நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 41 வாகனங்களும், 65 வீடுகளும் சேதமடைந்துள்ளன. அத்துடன், 
 வன்முறை சம்பவங்களால் 38 வீடுகளும், 47 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த 8 பேரில் ஆறு பேர் மேல் மாகாணத்திலும், இருவர் தென் மாகாணத்தில் நடந்த வன்முறையின்போதும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன். மேல் மாகாணத்தில் மாத்திரம் 15 வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், 29 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் 8 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், 23 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தென் மாகாணத்தில் 7 வீடுகள் தீயினால் சேதமடைந்துள்ளதுடன் 9 வீடுகள் தாக்குதல்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலும், தென் மாகாணத்தில் 5 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஒன்பது வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் மேலும் இரண்டு வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த மாகாணத்தில் எட்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.

உயிரிழந்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரும், பிரதேச சபைத் தலைவரொருவரும், உபபொலிஸ் பரிசோதகரொருவரும், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

No comments