கோட்டோ கோ கமவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
ஜனாதிபதியை பதவி விலக கோரி கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் நடாத்தி வருவோர்களினால் அமைக்கப்பட்ட கோட்டோ கோ கமவில் இன்றையதினம் புதன்கிழமை காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
காலை ஆரம்பமாகியுள்ள அஞ்சலி நிகழ்வில் பலர் கலந்து கொண்டு மலர் தூபி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்று , இன்றைய தினம் மாலை வரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை கடந்த காலங்களில் காலி முகத்திடலில் போர் வெற்றி விழா கொண்டாடப்பட்டு வந்தது. இம்முறை முதல் முறையாக அந்த போரினால் உயிரிழந்தவர்களுக்கு காலி முகத்திடலில் மலர் தூபி அஞ்சலி செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments