பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டி பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் தங்கியிருந்த சீனாவைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து வியாபார நோக்கத்திற்காக புத்தளம் - கற்பிட்டி பகுதிக்கு சொகுசு காரில் வந்த போதே விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments