கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த "கோட்டோ கோ கம" வில் இருந்த நூலகம் வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை என்பவற்றின் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை பிரதமருக்கு ஆதரவாக அலரி மாளிகையின் முன்பு கூடியவர்கள், தீடிரென வன்முறையில் இறங்கி, அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு , அவர்களின் கூடாரங்களை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து காலி முகத்திடல் நோக்கி நகர்ந்து , அங்கு "கோட்டா கோ கம"வில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு , அவர்களின் கூடாரங்களையும் அடித்து நொறுக்கி அவற்றுக்கும் தீ வைத்தனர்.
அதேவேளை குறித்த வன்முறை கும்பல் அங்கிருந்த சிறிய நூலகம் ஒன்றினையும் தீ வைத்து எரித்தனர். அதன் போது நூலகத்தில் இருந்த பெறுமதியான நூல்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
No comments