நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறைக்குத் தீர்வாக இந்தியாவிடம் இருந்து எரிவாயு கொள்வனவு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய கடன் வசதியின் கீழ் இவ்வாறு எரிவாயு கொள்வனவு செய்வதற்கான பேச்சுவாத்தை இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தாய்லாந்தில் இருந்தும் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது
No comments