நாளைய தினம் வெள்ளிக்கிழமையும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் ஆகிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments