பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்க வந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து தாக்கியுள்ள அதேவேளை அவர்களை ஏற்றி வந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி ,தீயும் வைத்துள்ளனர்.
பிரதமர் பதவி விலக கூடாது என கோரி இன்றைய தினம் அலரி மாளிகை முன்பாக கூடியவர்கள் வன்முறையில் இறங்கி பிரதமர் மற்றும் ஜனாதிபதியை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களின் " மைனா கோ கம " , மற்றும் "கோட்டோ கோ கம" ஆகியவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டு தீ வைத்தனர்.
அந்நிலையில் , பொதுமக்கள் பலரும் ஒன்றிணைந்து வன்முறை கும்பல்களை மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.
அதேவேளை அவர்களை ஏற்றி வந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி உள்ளனர். மாளிகாவத்தை பகுதியில் பேருந்து ஒன்றுக்கு தீ வைத்து தீக்கிரை ஆக்கியுள்ளனர்.
அதேவேளை வன்முறை கும்பலுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட வாகனத்தில் மதுபானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்து சொகுசு வாகனம் ஒன்றினை மறித்தும் பொதுமக்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். அதில் இருந்து பெருமளவான மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
No comments