வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் பிரதேசசபை உறுப்பினரை மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாத்தளை - உகுவளை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக மாத்தளை தலைமையக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த நபருடன் மேலும் இரண்டு பேர் கூட்டுச் சேர்ந்து வீடொன்றினுள் நுழைந்து ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களான தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர், மின்விசிறி போன்ற பொருட்கள் சந்தேக நபர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments