Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொன்னாலையில் கத்தி வெட்டு - இருவர் காயம்


யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திவெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த  கி.பூபாலரத்தினம் (வயது-57) பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

No comments