கொழும்பின் சில பகுதிகளில் இன்றய தினம் சனிக்கிழமை இரவு முதல் 11 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று இரவு 09.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு 09, 10, 11 மற்றும் 12 ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
கழிவு நீர் முகாமைத்துவ முறைமை மேம்படுத்தப்படுவதன் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது
No comments