காலி ரத்கம கம்மெத்தே கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 48 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை நேற்றைய தினம் இரவு கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதி பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
No comments