Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வெலிக்கடை சிறைப்படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவஞ்சலி!



ஜூலை கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன்,தேவன் மற்றும் பொது மக்கள் என 53 பேர்கள் உட்பட கலவரத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 

யாழ்ப்பாணத்தில் உள்ள ரொலோவின் அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை  அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 

அந்நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.விந்தன் , யாழ்,மாநகர சபையின் துணை முதல்வர் து. ஈசன் , நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் இ.ஜெயகரன் உள்ளிட்ட ரொலோ கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி , மலரஞ்சலி செலுத்தினர். 

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படப்பட்ட வன்முறைகள் , மறுநாள் வெலிக்கடை சிறைச்சாலை உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி இருந்தன. அதில் 3ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான பெறுமதியான தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் , தீயிட்டு கொளுத்தப்பட்டும் அழிக்கப்பட்டன.

வெலிக்கடை சிறையில் 25, மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன்,தேவன் மற்றும் பொதுமக்கள் என 53 பேர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

No comments