Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

எரிபொருளை பதுக்கிய முகாமையாளருக்கு 3 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!


எரிபொருளை மக்களுக்கு விநியோகிக்காமல் , பதுக்கி  வைத்திருந்த குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை மூன்று வருட காலத்திற்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார். 

அனுராதபுரம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருட்களை மக்களுக்கு வழங்காது பதுக்கி வைத்துள்ளார் என நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு  கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து , அவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சோதனைகளை முன்னெடுத்த போது , மக்களுக்கு விநியோகிக்காமல் ,பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5813 லீட்டர் சூப்பர் டீசல் மற்றும் 1540 லீட்டர் பெட்ரோல் என்பவற்றை மீட்டு இருந்தனர். 

அதனை அடுத்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருக்கு எதிராக அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். 

குறித்த வழக்கில் முகாமையாளரை குற்றவாளியாக கண்ட நீதிமன்று கடுமையாக எச்சரித்து  அவருக்கு 3 மாத கால சிறைத்தண்டனை விதித்து , அதனை 3 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

No comments