யாழ்ப்பாண நகர் பகுதிகளில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஆறு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளின் இலக்கம் தொடர்பில் தற்போது வரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் எதுவும் பதியப்படவில்லை எனவே யாழ்ப்பாண நகரப் பகுதியில் சைக்கிள்களை பறிகொடுத்தவர்களை யாழ்ப்பாண பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் அறிவித்துள்ளார்கள்.
No comments