Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கிளிநொச்சியில் 6800 லீட்டர் டீசல் மற்றும் 200 லீட்டர் பெற்றோலுடன் ஒருவர் கைது!


கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 35 கொள்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதியில் உள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

இதன்போது, குறித்த காணியிலிருந்து 33 கொள்கலனில் 6800 லீட்டர் டீசலும், 1 கொள்கலனில் 200 லீட்டர் பெற்றோலும், மற்றுமொரு கொள்கலனில் 25 லீட்டர் மண்ணெண்ணையும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் டீசல் லீட்டர் ஒன்று 1700 ரூபாவிற்கும், பெற்றோல் வீட்டர் ஒன்று 3000 ரூபாவிற்கும், மண்ணெண்ணை லீட்டர் ஒன்று 1500 ரூபாவிற்கும் கறுப்பு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments