கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் இவை அடையாளம் காணப்பட்டு, பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதனை அடுத்து, விசேட அதிரடிப்படையினரால் குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதில் மோட்டார் செல்கள், மகசின்கள், கண்ணீர் புகைக்குண்டுகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
No comments