இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரூபவாஹினியின் ஒலிபரப்பு சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் வரையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று நண்பகலுக்கு பின்னர் இராணுவத்தினர் பொலிஸாரிடம் இருந்து பொறுப்பேற்ற நிலையில் அங்கிருந்து பொலிஸார் வெளியேறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments