பளை முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் தொடர்ச்சியாக மக்களுக்கு எவ்வித குழப்பமுமின்றி எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிராமசேவகரினால் வழங்கப்பட்டுள்ள எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு QR அட்டை மற்றும் வாகனத்தின் இறுதி இலக்கங்கள் என்பன பார்வையிட்டு எரிபொருள் வழங்கப்படுகிறது.
இது தொடர்பில் முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மயில்வாகனம் ஸ்ரீதாசன் தெரிவிக்கையில்,
எமது முகமாலை எரிபொருள் நிலையத்தினால் மக்களுக்கு எவ்வித குழப்பமுமின்றி ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுகளில் வசிக் கும் மக்களுக்கும் (கிராமசேவகரினால் வழங்கப்பட்டுள்ள எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு ) QR அட்டை மற்றும் வாகனத்தின் இறுதி இலக்கங்கள் என்பன பார்வையிட்டு எரிபொருள் வழங்கி வருகின்றோம்.
இவ்வாறு குழப்பமின்றி எரிபொருள் வழங்குவதற்கு பொதுமக்கள் கிராமசேவகர்கள், இராணுவத்தினர்கள் பளை பொலிஸார் மற்றும் எமது நிரப்பு நிலையத்தின் ஊழியர்களும் ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அனைத்து மக்களுக்கும் நாம் கிராம சேவகர் பிரிவுகளின் ஊடாக எரிபொருள் வழங்குவதற்கு தயாராக உள்ளோம். ஆகவே அனைத்து மக்களும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு கிராமசேவகரினால் வழங்கப்படும் எரிபொருள் அட்டை மற்றும் QR அட்டை ஆகியவற்றை பெற்று எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருங்கள் என தெரிவித்தார்.
No comments