Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அலரிமாளிகையில் இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு!


அலரிமாளிகையில் பல்வேறு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அலரிமாளிகை ஊழியர்களே இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம், அலரிமாளிகையில் இருந்து சில உபகரணங்களும் திருடப்பட்டுள்ளதாக அலரி மாளிகையின் ஊடகப் பிரிவு முறையிட்டுள்ளது.

எவ்வாறாயினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் அலரிமாளிகையை ஆக்கிரமித்து வருவதால், அலரிமாளிகை வளாகத்தில் இருந்து என்னென்ன பொருட்கள் திருடப்பட்டன என்பதை அறிய முடியவில்லை என கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அலரிமாளிகையில் பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் பல சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இன்று அதிகாலை அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments