Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முகக்கவசம் கட்டாயம் - கொரோனா சுகாதார வழிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்


மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடும் போதே சுகாதார அமைச்சின் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னதாக கடைபிடிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைபிடுத்தல், அவசியமற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தம் மற்றும் ஒன்று கூடல்களை கட்டுப்படுத்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸானது ஒமிக்ரோன் வைரஸின் திரிபாக கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்ந்தும் கட்டுப்படுத்தக்கூடிய அளவிலே காணப்படுவதாகவும், சுகாதார வழிமுறைகள் முறைகளை உரிய முறையில் கடைபிடிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுஇடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பரவுவதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி போன்ற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments