ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தனது மனைவி மற்றும் மெய்பாதுகாவருடன் மாலைதீவுக்கு தப்பி சென்றுள்ளதாக AFP செய்தி சேவை உள்ளூர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் மாலைதீவுக்கு தப்பி சென்றுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன.
இன்றைய தினம் புதன்கிழமை ஜனாதிபதி தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளிப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
No comments