வவுனியாவில் கொடூரமான முறையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சா என அழைக்கப்படும் ஜோன்சன் (வயது 30) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை மாலை ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று, கட்டுத்துவக்கினால் சூடு நடத்திய பின்னர் கூரிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
படுகொலை செய்த பின்னர் அவரது வலது கையினை தோள் பட்டையுடன் துண்டித்து எடுத்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்/.
No comments