கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் பொலிஸ் சீருடை அணிந்து பெட்ரோல் பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் , எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸ் சீருடையுடன் சென்று தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தராக அடையாளப்படுத்தி பெட்ரோல் பெற்று வந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்து கல்முனை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பொலிஸ் சீருடை அணிந்து பெட்ரோல் பெற்று வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
குறித்த முன்னாள் உத்தியோகஸ்தருக்கு பொலிஸ் சீருடை எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பிலும் சீருடையுடன் வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டாரா ? என்பன தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
No comments