காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற மோதலில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (13) அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் 15 முதல் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், கொழும்பு 15 மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments