Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைத்த சிறை - உடைமைகள் அரசுடமை ஆக்கப்பட்டது.


யாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து,  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

அதேவேளை அவர்களின் இரண்டு படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் என்பன அரச உடமையாக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்ட  11 தமிழக மீனவர்கள்   இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். 

அதனை அடுத்து நீதவான் 11 மீனவர்களையும் இன்றைய தினம் வெள்ளிககிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 11 மீனவர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்து அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்ததுடன் , அவர்களின் படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை அரச உடமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். 

No comments