Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மதகுருமார்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை பேண கோரிக்கை!


இலகுவான முறையில், முன்னுரிமை அடிப்படையில் பெட்ரோல் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து தந்தமைக்காக யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில்  ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின்  உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசாவுக்கு மத தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். 

மாற்றுத்திறனாளிகள் மற்றும் சர்வ மத குருமார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்  சாவகச்சேரி நுணாவில்  ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது. 

அதனால் மாற்றுத்திறனாளிகள் , மதகுருமார்கள் நெருக்கடிகள் இன்றி பெட்ரோல் பெற்று சென்றனர். 

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. அதில் மாற்றுத்திறனாளிகள் , மதகுருமார்கள் காத்திருந்து பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து எரிபொருளை பெற்று வந்தனர். 

இந்நிலையில் சாவகச்சேரி நுணாவில்  ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் மாற்றுத்திறனாளிகள் , மதகுருமார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெட்ரோல் வழங்கியமையால் , சிரமங்கள் இன்றி அவர்கள் பெட்ரோல் பெற்று சென்றனர். 

மாற்றுத்திறனாளிகள் , மாற்றுத்திறனாளி தொழில் முயற்சியாளர்கள்,  மத குருமார்கள் உள்ளிட்டவர்களுக்கு தனி வரிசையை பேணி தொடர்ந்து வரும் காலங்களில் அவர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 





No comments