Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

எரிபொருள் பெற வந்த யுவதி டிப்பர் மோதி உயிரிழப்பு!


அனுராதபுரம், பந்துலகம, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக, நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில்,  டிப்பர் வாகனம் மோதியதில் யுவதியொருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். 

அப்பகுதியை சேர்ந்த 28 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து எரிபொருள் உள்ளதா? என அறிந்து மீண்டும் அவ்விடத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று திடீரென முன்னோக்கி நகர்ந்து மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

அதன் போது, தாயும் மகளும் டிப்பரின் முன் சக்கரத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளானார்கள். 

விபத்தில் படுகாயமடைந்த தாயையும் மகளையும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்த போது, அங்கு சிகிச்சை பலனின்றி மகள் உயிரிழந்துள்ளதுடன், தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் இயங்கததால் , அதனை மற்றுமொரு டிப்பர் வாகனத்தினால் பின்னாலிருந்து  தள்ளி இயக்க முற்பட்ட போதே, டிப்பர் முன்னோக்கி சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

No comments